Monday, June 2, 2008

கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்!

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.


உற்சாகமுள்ள பெண்ணே! கிழக்க சூரியனோட வருகையால சிவந்த வானம் இப்ப வெள்ளையா மாற ஆரம்பிச்சுடுத்து. பசியோட உள்ள எருமைகளெல்லாம் இப்ப மேயறதுக்காக பக்கத்துல உள்ள புல்வெளிக்குப் போயாச்சு. நாங்களும் மத்த கோபியற எழுப்பி இப்ப உன்னைய எழுப்ப வந்திருக்கோம். சீக்கரம் எழுந்திருடீ! நாம எல்லாருமா சேர்ந்து அந்த பகவானோட மகிமையப் பாடினா நாம வேண்டறது எல்லாத்தையும் அவன் தருவான். கேசி அசுரனோட வாயை பிளந்து கொன்ற அந்த பகவான் - கம்சனோட சபையில உள்ள மாவீரர்களெல்லாரையும் கொன்ற தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான அந்த நாராயணன், நமக்கு எல்லா நலத்தையும் கொடுப்பான். அதனால, சீக்கிரமா எழுந்து வாடி!


No comments: