கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.
ஏய் பேய்ப் பெண்ணே! கீச்சு கீச்சுன்னு கத்தற ஆனைச்சாத்தான் பட்சிகளோட சத்தம் உன் காதுல விழலையா? பொழுது விடிஞ்சாச்சு. உன்னைச்சுத்தி உள்ளவா எல்லாம் எழுந்தாச்சு. நறுமணமுள்ள பூக்களத் தலையில வச்சுண்டு மத்த கோபிகளெல்லாம் மத்தால தயிர் கடையற சத்தம் உனக்கு கேக்கலை? அவா போட்டுண்டு இருக்கற காசுமாலையும் வளையலும் கிலுகிலுக்கற சத்தம் கூட உனக்குக் கேக்கலையா? நாங்களெல்லாம் கேசவனைப் பாடும் போது உன்னால மட்டும் எப்படித் தூங்க முடியறது? ஏ அழகான தோழியே! வா! வந்து கதவத் திற. நாம எல்லரும் சேர்ந்து அந்த நாராயணனோட மகிமையைப் பாடுவோம்!
No comments:
Post a Comment