நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பாவை நோன்பு இருந்து சொர்க்கம் போக நம்பிக்கையா இருக்கற பொண்ணே! கதவையும் திறக்காம கூப்பிட்ட குரலுக்கும் பதில் கொடுக்காம அப்படி என்னத் தூக்கமோ? நாம பக்தியோட சேவிச்சா நமக்கு வேண்டியறதத் தர்ற நாராயணனால கொல்லப்பட்ட கும்பகர்ணன் தன்னோட தூக்கத்த உனக்குக் கொடுத்துட்டு யமன்கிட்ட போயிட்டானோ? ஆழ்ந்த தூக்கத்துல விழுந்திருக்கற தோழியே! நீ எங்க குழுவுல ஒரு விளக்கு! வா வ்ந்து கதவத்திற! நாமெல்லாம் சேர்ந்து நோன்பிருப்போம்!