Tuesday, February 26, 2008

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க...


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


மதுராவுல பொறந்த வீரம் மிக்கவனான அந்த மாயக்கண்ணணை, யமுனா நதியில கோபியரோட விளையாடற அந்த பகவானை, ஆயர் குலத்துல உதிச்ச அந்த விளக்கொளி போன்ற பிரகாசமானவனை, தான் மகனாகப் பொறந்ததுனாலேயே தன்னோட அம்மாவுக்கு மேன்மையைத் தந்தவனை நாம எல்லாரும் போய் சிரத்தையோட பூக்களைக் கொண்டு அர்ச்சனை பண்ணி நமஸ்காரம் செய்து, அவனோட நாம கீர்த்தனங்களைப் பாடி, நம்ம மனசாலேயே சேவிச்சோம்னா, நாம போன ஜன்மங்கள்ளயும், இந்த ஜன்மத்துலேயும் எதேனும் பாவம் பண்ணிருந்தாலும் இனிமேல் வர்றப்போற பிறப்புல எதேனும் பாவம் பண்ணினாலும் அந்தப் பாவங்களெல்லாம் நெருப்புல விழுந்த தூசியப்போல பொசுங்கிடுமாக்கும். அதனால அந்த மாயக்கண்ணனை நாம எல்லாரும் பக்தி சிரத்தையோடு சேவிப்போம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

No comments: