Tuesday, February 26, 2008

அரி என்ற பகவான் நாமகோஷம் கேக்கலயா?

எனக்குப் பிடிச்ச திருப்பாவைப் பாசுரங்கள்ல இதுவும் ஒண்ணு. ஆண்டாள் இதுல சொல்லற உவமைகள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு.


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


அடியே இளம்பெண்ணே! பொழுது விடிஞ்சாச்சுன்னு பறவைகளெல்லாம் சத்தம் போடறதப் பாரு. கருடனை வாகனமாகக் கொண்டிருக்கற நம்ம பகவானோட கோவில்ல வெண்சங்கு ஊதறாளே, அது உனக்குக் கேக்கலையா? எழுந்திருந்து பாரு! சின்னகுழந்தையா இருந்தப்ப போதனைங்கற அரக்கியோட பாலை உறிஞ்சினப்பவே அவளோட உயிரையும் குடிச்சு, தன்னைக் கொல்ல வந்த அரக்கனைத் தன்னோட சின்னக் காலாலையே உதைச்சுக் கொன்னானே பாற்கடல்ல ஆதிசேஷன் மேல சயனிக்கற நம்ம பகவான், அவனை மனசுலயே பூஜை செய்து முனிவர்களும், யோக சித்தர்களும் தங்களோட தவத்துலேந்து எழுந்து 'அரி'ன்னு கோஷம் எழுப்பறா. அந்த சத்தம் நம்ம மனசை குளிர்விக்கும்டீ. அத கேட்டு நம்ம பாவை விரதத்தை தொடர எழுந்திருடீ பொண்ணே!


(விரதம் தொடர்வாள் கோதை...)

No comments: