வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
உலகத்துல வாழறவாழெல்லாம் நாம பாவை விரதம் முழுக்க என்ன என்ன செய்யணும்னு கேட்டுக்கோங்கோ! பாற்கடல்ல ஆதிசேஷன் மேல மெல்ல தூங்கிண்டு இருக்கானே பரந்தாமன், அவனோட நாமாவளியைச் சொல்லி அவன் புகழைப் பாடணும். இந்த முப்பது நாளும் நெய் பால் ரெண்டையும் சேர்க்காம இருக்கணும். கார்த்தால சீக்கரமா குளிச்சுடணும். கண் மை வச்சுக்கக் கூடாது, பூவையும் வச்சுக்காதீங்கோ! செய்யக்கூடாத தப்பு ஒண்ணையும் செஞ்சுடாதேள். பேசக்கூடாத தப்பான பேச்சு பேசிடாதீங்கோ. ஏழைகளுக்கும், தேவைப்பட்டவாளுக்கும் நிறைய உதவி செய்யணும். நாம இந்த வாழ்க்கையில நேர்மையான நல்ல வழியிலயே போய் பகவானை அடைய பிரார்த்தனை செய்வோம்.
(விரதம் தொடர்வாள் கோதை...)
No comments:
Post a Comment