Thursday, June 19, 2008

மாமன் மகளே! கதவைத் திறவாய்!


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


மாமன் மகளே! ரத்தினங்கள் ஜொலிக்கற மாடத்த சுத்தி விளக்கெரியறது; அருமையான பத்தி மணம் கமழறது. நீயோ நன்னா பஞ்சணை மேல உன்னையே மறந்து இன்னும் தூங்கிண்டு இருக்கறயே! கதவத் திற முதல்ல! மாமி! உங்க பொண்ண எழுப்புங்கோ! அவ என்ன செவிடா இல்லை ஊமையா? இல்லை சோர்வடஞ்சுட்டாளா? இல்லை யாராவது இப்படித் தூங்கறதுக்கு சாபம் நாம எல்லாரும் அந்த மாயன், மாதவன், வைகுந்தனோட நாமத்தச்ச் சொல்லீ அவள எழுப்புவோம்.


No comments: